Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Book Reviews ஆவல்கள் தீர வா

ஆவல்கள் தீர வா

✍️ பவித்ரா நாராயணன் ★★★★★
#1
ஆவல்கள் தீர வா....

பூமர் நாயகனுக்கும் 
புரட்சி நாயகிக்கும் 
பார்த்த முதலே மோதல்
பாடல் வழி காதல்.....


ஆச்சாரங்கள் சூழ்ந்த வீட்டில்
ஆண்கள் சொல்வதே சட்டமென வாழ்ந்தவன் அவன்…
ஆதரவாய் இருந்த பெரியப்பாவின்
ஆணையை வாழ்வாக எண்ணியவன்....

அடக்கமே பெண்ணின் அழகு என்றும்
அமைதியே 
அவளின் ஒழுக்கம் என்றும்
அழுத்தமான பழைய எண்ணங்களில்
அமர்ந்து போனவன்....


ஆணும் பெண்ணும் சமம் என
அஞ்சாத மனமும் சுயமரியாதையும் கொண்டவள்…
ஆர்வமாய் வாழ கற்ற பெண் 
அவள் தாரகை…



அண்ணனாக இருந்த அரிச்சந்திரன்
ஆழ்ந்த சிந்தனைகள் சொல்லித் தந்து 
ஆறுதலும் பொது 
அறிவும் சேர்த்து
ஆதரவு தந்த 
ஆசான் ஆனான்....

ஆரம்பத்தில் 
(துரை 🤩தாரகை )
அவனும் அவளும் சந்தித்த நாள் முதல்
அடிக்கடி மோதல்கள் தான்....

அர்த்தமில்லா சண்டைகளுக்குள் கூட
அழகான புரிதல் இருக்க
அறிந்தும் அறியாத மனநிலை…
அவர்களுக்குள் விலகாத உணர்வுகள்…


அவளின் சுதந்திரம் அவனை கோபப்படுத்த
அவனின் ஆணவம் அவளை எதிர்க்க வைத்தது....

அதற்குள் காதல் மெதுவாய் வளர்ந்தது
அவர்களின் வாக்குவாதம் கூட
அன்பின் மொழியாக மாறியது.....

ஆணவம் நிறைந்த ராஜாதுரையின்
ஆண்ட மனதிற்குள்
ஆத்மவலிமை கொண்ட தாரகை ஆக்கிரமித்தாள்
ஆளுமையாக அவன் எண்ணங்களில்....

அழகான பாடல் வரிகளில்
அன்பை பரிமாறிக் கொள்ளும் விதம்
அழகு...
 
ஆனால் விழிகளில் மறைத்த காதல்
ஆழமாய் இதயத்தில் வேரூன்றியது…

அன்று தங்கை காதலை அறவே வெறுக்க 
அவனின் காதலை
அவனால் ஏற்க முடியாது தவிக்க
அன்னையின் பிடிவாதத்தால் 
அவன் காதல் அவளுடன் கை சேர....


ஆணவ ராஜாவுக்கும்
ஆவேச புரட்சி ராணிக்கும்
ஆயிரம் மோதல்கள் வந்தாலும்
ஆதரவாய் காதல் நின்றது.....

அறிவு மாமா
அறிவாக பேசுவதாக
அவர்களுக்கு நடுவில்
அப்பப்போ அப்பாவியாக
அப்பப்பாவென்று 
அல்லல் படும் 
அறிவு ஜீவி.....

அரிச்சந்திரன்
அண்ணனாக
ஆசானாக
அற்புதம் 

அம்மா அருணா
அதட்டல் கொஞ்சம்
ஆசையும் ஏக்கமும்
அப்பப்போ 
அன்னையின் அதிகாரமும்
அசத்தல்.....

அதிகார பெரியப்பா
ஆண் வர்க்கத்தின்
ஆணவம் கொண்டவர்
அவ்வளவு சீக்கிரம்
அவரை திருத்த முடியாது.....


அன்பால் விட்டுக்கொடுத்து
ஆழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து
ஆன்மாவாய் இணைந்த பந்தம்
ஆயுள் முழுதும் இனிமை ஆனது....

அவள் கணவனை புரிந்தாள்
அவன் மனைவியின் மனதை 
அறிந்தான்....

அடங்காத இரு துருவங்கள் கூட
அடிக்கடி முட்டிக் கொண்டாலும்
அன்பின் புரிதலில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தார்கள்....

அமைதியான இல்லறத்தில்
அவர்களின் காதல் தினமும் புதிதாயிற்று....

அள்ளி கொடுத்த பாசத்தில்
ஆத்திரமும் கூட இனிமையாய் தீர்ந்தது...

ஆசைகள் தீர்ந்த பின்னும்
ஆவல்கள் தீரவில்லை....


ஆண்டுகள் கடந்த பின்னும்
ஆராத காதலாய் அவர்கள்
ஆவல்கள் தீர வா....
❤️ 2
💬 2 Replies
Pavithra Narayanan Admin 2 months ago

Wonderful write-up! 

Happy that you enjoyed the story sis 🥰🥰
❤️ 1
more...
Mrs Beena loganathan Reader 2 months ago

Thanks ma....thank you so much 🤩🤩🤩🤩👍🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

❤️ 1
more...
💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top